June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா ; 230 பேர் சாவு

1 min read

Corona detected 8,392 people in one day in India; 230 people died

1-6-2020
இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 230 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் .

8,392 பேருக்கு கொரோனா

இந்தியாவில் பரவி வரும் கொரோனா நிலவரம் பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இன்று (திங்கட்கிழமை ) காலை 9:30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் , இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவுக்கு 230 பேர் இறந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,394 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்1,824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,818 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புடன் தற்போது 93,322 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.