பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
1 min read
பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
6.6.2020
An AIADMK executive arrested for sexually abusing womanதேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே தேவாரம் டிகேவி பள்ளி தெருவை சேர்ந்தவர் ராமர் மகன் ராஜீவ் (35). பேரூராட்சி 6வது வார்டு அதிமுக செயலாளர். இவரது மனைவி பிரியதர்ஷினி. அதே தெருவைச் சேர்ந்த 32 வயது இளம்பெண்ணுடன் ராஜீவ் நட்பாக பழகியுள்ளார். இந்நிலையில், ராஜீவ் தனது செல்போனில் இளம்பெண்ணுக்கு தெரியாமல், அவரை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்த ராஜீவ், அவரது மனைவி ஆகியோர், ‘‘இனிமேல் நாங்கள் சொல்கிறபடிதான் நீ கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உனது ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம். வெளியிடாமல் இருக்க ரூ.2 லட்சம் கொடு’’ என மிரட்டியுள்ளனர்.
இது குறித்து தேவாரம் போலீஸ் ஸ்டேஷனில் இளம்பெண் அளித்த புகாரில், ‘ராஜீவ் எனக்கு தெரியாமல் ஆபாச படம் எடுத்து, அப்படங்களை எனது மகளிடம் காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும், பணம் கேட்டும் மிரட்டுகின்றனர். எனவே, என்னை மிரட்டும் ராஜீவ் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இதன் பேரில், தேவாரம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்ஐ இத்ரீஸ்கான் ஆகியோர், வழக்கு பதிந்து ராஜீவை கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவி பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.