கொரோனா மருந்து- உலக சுகாாதரா நிறுவனத்திற்கு இந்தியா நன்றி
1 min read
Corona Pharma- India thanks to World Sugatara
5-5-2020
கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கான சோதனை தொடங்கலாம்
என உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததற்கு இந்தியா நன்றி தெரிவித்து உள்ளது.
கொரோானா
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 65 லட்சத்துக்கும் அதிகமாகி வருகிறது.
உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. தமிழ்நாடும் கொரோனாவுக்கு தப்ப வில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்பு தொடரும் நிலையில் கொரோனாவுக்கு உலகில் எங்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.
உலக சுகாதார நிறுவனம்
இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா நோய்
த்தடுப்புக்கு பயன்படும் ஒருவகை மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்ற கருத்தை அமெரிக்க ஐனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து ௯றிவருகின்றனர்.
இந்தியா,அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கொரோனா தடுப்பில் இந்த மருந்தால் எந்த பலனும் இல்லை என்றும் தகவல்கள் வருகிறது.
இதற்கிடையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்கு ஹைட்ராக்சி குளோரோ குயில் பயன்பாடு உள்பட நடை முறையில் உள்ள அனைத்து பரிசோதனை களையும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார (டபிள்யூ ஹெச் ஓ)நிறுவனத்தின் தலைவர் டெட்றாஸ் அதானொம் தெரிவித்து உள்ளார்.
தற்போது கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில்கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு வழிமுறையை கண்டறியும் சோதனை நெறிமுறையையும் மாற்ற எந்த காரணங்களும் இல்லை என்று சோதனை தரவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு பரிந்துரை செய்தது.
எனவே, ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாடு உள்பட நோயாளிகளுக்கு க்கொடுக்கப்பட்டு மேற்கொள்ள ப்படும் சோதனை அனைத்தையும் தொடருவதற்கு டபிள்யு ஹெச் ஓ நிர்வாக்க்குழு ஒப்புதல் வழங்குகிறது என்றும் டபுள்யூ ஹெச் ஓ தலைவர் டுவிட்டர் பக்கத்
தில தெரிவித்துள்ளார்.
இந்தியா வரவேற்பு
உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பும் நன்றியும் தெரிவித்து உள்ளது.