June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா

1 min read


1,685 corona one day in Tamil Nadu

9-6-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோன நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல் வருமாறு :-

தமிழகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மட்டும் மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 36 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதனை அடுத்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 13,219 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இது வரையில் தமிழகத்தில் 6,21,171 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

21 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு
21 பேர் இறந்துள்ளனர். இதில் 20 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இறந்தவர்களில் 15 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 6 பேர் தனியார் ஆஸ்பத்தரியிலும் இறந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18,325 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,839 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 29,260 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 3,815 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.