இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 331 பேர் சாவு
1 min read
331 people die for corona one day in India
9-6-2020
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 331 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7466 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கை எடுத்தாலும் அதை முழுமையாக கட்டுப்டுத்த முடியவில்லை. அது தீவிரமாக பரவி வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
கொரோனா தகவல்களை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 9987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,66.598 அதிகரித்து இருக்கிறது.
331 பேர் சாவு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 331 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 7466 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 129215 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.5 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 129917 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மராட்டியம்
இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 88528 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 33229 பேருக்கும், டெல்லியில் 29943 பேருக்கும், குஜராத்தில் 20545 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.