சென்னையில் இன்று 1,149 பேருக்கு கொரோனா
1 min read
Corona to 1,149 in Chennai today
சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னையில் குரோனாவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக தினமும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. இன்று ( திங்கட்கிழமை) 1,149 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23, 298 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களில்…
தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று மட்டும் 413 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் செங்கல்பட்டில் 134 பேருக்கும். திருவள்ளூரில் 57 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 18 பேருக்கும், தூத்துக்குடியில் 26 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 20 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு
இன்று மட்டும் தமிழகத்தில் 17 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 12 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் இது வரை 224 பேர் இறந்து இருக்கிறார்கள்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேர் கத்தாரில் இருந்தும், 3 பேர் குவைத்தில் இருந்தும், ஒருவர் டெல்லியில் இருந்தும், 22 பேர் மராட்டிய மாநிலத்தில்ி இருந்தும், ஒருவர் அரியானாவில் இருந்தும், 6 பேர் டெல்லியில் இருந்தும் வந்தவர்கள். இதன் மூலம் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதில், 20,575 பேர் ஆண்கள். 12, 637 பேர் பெண்கள் மற்றும் 17 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இன்று கொரோனா உறுதியான 1,562 பேரில் 941 பேர் ஆண்கள். 621 பேர் பெண்கள். இன்று மட்டும் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து வீடுதிரும்பியவர்களின் எண்ணிக்கை 17, 527 ஆக அதிகரித்துள்ளது. 15,413 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுவரை 6,07,952 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், இன்று 14,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை, 5,80,768 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், இன்று மட்டும் 14,454 பேருக்கு பரிசோதனை நடந்துள்ளது.
தமிழகத்தில் 77 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதில் 44 அரசு ஆய்வகங்கள். மற்ற 33 தனியார் ஆய்வகங்கள் ஆகும். 12 வயது வரை உள்ள சிறுவர்களில் 1,756 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 27,906 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3,558 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
இன்று மட்டும் அரசு மருத்துவமனையில் 14 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என 17 பேர் உயிரிழந்துள்ளனர். (சென்னையில் 12 பேரும், திருவள்ளூரில் 2 பேரும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.) இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது