June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min read
SSLC public Exam. Abolish- Edappadi Palanisamy

9-6-2020
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பொதுத்தேர்வு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுத் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. பிளஸ்-2 தேர்வு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் ஒன்றிரண்டு தேர்வுகள் மட்டும் நடத்தப்படவில்லை.
தற்போது ஊரடங்கு ஒரளவு தளர்த்தப்பட்ட நிலையில் பொத் தேர்வை எப்படியும் நடத்திவிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டது. அதன்படி எஸ்.எஸ்.எல்.சி.(10 -ம் வகுப்பு) பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

வழக்கு

அதனை எதிர்த்து ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரத்து

இந்த நிலையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது அங்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்று கூறப்பட்டது.

தமிழகத்திலும் பொதுத் தேர்வு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி அடைவார்கள்.
தற்போது நடத்தப்படாமல் நிலுலையில் உள்ள 11-ம் வகுப்பு தேர்வும் ரத்து. எஞ்சியுள்ள 12-ம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் 80 சதவீதம் மற்றும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் மாணவர்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.