காசியுடன் நெருக்கமாக இருந்த பெண்கள் -வீடியோ வெளியானதால் விஐபிக்கள் பீதி
1 min read
9/6/2020
Women close to Kasi – VIPs panicகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசியின் வழக்கு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்ததில் பல விசயங்கள் தெரிவந்துள்ளன.
இதுவரை நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்கள், நிர்வாண போட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவைகளை வைத்து மிரட்டி பணம் பறிக்க உதவியாக இருந்த ஜீனோ என்ற காசியின் நண்பரை கைது செய்துள்ளனர். இன்னொரு நண்பன் சிங்கப்பூரில் இருப்பதாகவும் அவரை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதுவரை 6 பெண்கள் இவர் மீது புகார் அளித்துள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் கைதாகிய இவரை இரண்டு கட்டமாக நடந்த போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போதைய விசாரணையின் படி லேப்டாப் மற்றும் செல்போன்களில் பலதரப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் சூறையாடப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் மனைவிகள், சிறுமிகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள், நடிகர்களின் மகள்கள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்களின் மகள்கள் என்று இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியலில் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.
பல விஐபி-களின் மனைவிகள் காசியுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் இதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் விஐபிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேப்டாப் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டவுடன் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது வழக்கிற்கான 4 முக்கியமான ஆவணங்களை சிபிசிஐடிக்கு விசாரணைக்காக போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
சமுதாயத்தில் இதுபோன்ற கொரோனாவை விட மோசமான விஷக்கிருமிகளை எப்படி அழிப்பது என்று போலீசார், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் திணறி வருகின்றனராம்.