July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா

1 min read
Corona for 1982 today in Tamil Nadu

12-6-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1982 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தினமும் மாலையில் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களைற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

இன்று இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக 1982 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

8 பேர் சாவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) 18 பேர் இறந்துள்ளனர். இதில் 8 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மற்றவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளிலும் இறந்தவர்கள். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1342 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் தமிழகத்தில் 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 18,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 18,231 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று 16,889 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,42,201 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.