நெல்லையில் நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோன- கடைக்கு சீல் வைப்பு
1 min read
Coronation of six jeweler employees at Nellai
13-6-2020
நெல்லையில் உள்ள பிரபல நகைக்கடை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பத கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான அளவில் கொரோனா பரவல் இருக்கிறது. தற்போது, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்தும் மும்பையில் இருந்தும் வந்தவர்களால் இந்த பரவல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை)15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பத உறுதி செய்யப்பட்டது. மும்பையில் இருந்து வந்த ஒருவருக்கும் கத்தார் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.
நகைக்கடை ஊழியர்கள்
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை செய்த ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த கடையில் பணியாற்றிய 32 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதுதான் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து கொரோனா கண்டறியப்பட்ட அந்த 6 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்தது மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சரியான முறையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த நகைக்கடைக்குச் சென்று கிருமிநாசினி தெளித்தனர். மேலும் வரும் 15-ந் தேதி வரை வரை கடையை திறக்க கூடாது என சீல் வைக்கப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு தொற்று உறுதியானது.
துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 28 பேருக்கும், மும்பையில் இருந்து வந்த 2 பேருக்கும் தொற்று உறுதியானது. துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண் உள்பட பயிற்சி டாக்டர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் என்ஜினீயர் சாவு
விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). சென்னை வண்டலூரில் தனியார் நிறுவனத்தி கட்டிடக்கலை என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார். இவா் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 8-ந் தேதி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடியில் சிகிச்சையில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.