இந்தியாவில் 69 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்
1 min read
Coronavirus prevalence is highest in 69 districts in India
13-6-2020
இந்தியாவில் 69 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தல் உள்ளது.
கொரோனா பாதிப்பு பற்றி தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 11,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. அதாவது 3 லட்சத்து 08 ஆயிரத்து 993 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் தற்போது ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 330 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
386 பேர் சாவு
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 386 பேர் இறந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக…
கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை மாநிலம் வாரியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை அடைப்புகுறிக்குள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மராட்டியம்- 1,01,141( 3,717)
தமிழ் நாடு- 40,698(367)
டெல்லி -36,824 (1,214)
குஜராத்-22,527 (1,415)
உத்தரபிரதேசம்,-12,616 (365)
ராஜஸ்தான்-12,068 (272)
மத்திய பிரதேசம்,-10,443 (440)
மேற்கு வங்கம்- 10,244 (451)
கர்நாடகம்-6,516 (79)
அரியானா-6,334(70)
பீகார்-6,103(36)
ஆந்திரா -5,680 (80)
காஷ்மீர்-4,730-(3)
தெலுங்கானா-4,484 (174)
ஒடிசா-3,498 (10)
அசாம்-3,498 (8)
பஞ்சாப் 2,986 (63)
கேரளா-2,322 (19)
உத்தர்காண்ட்-1,724 (21)
ஜார்க்கண்ட்-1,617 (8)
சத்தீஸ்கர்-1,429 ( 6)
திரிபுரா-961 ( 1)
இமாச்சல பிரதேசம்-486 (0)
கோவா-463 (0)
மணிப்பூர்-385 (0)
சண்டிகர்-334 (5)
லடாக்-239 (1)
புதுச்சேரி-157 (2)
நாகலாந்து-156 (9)
மிசோரம்-104 (0)
69 மாவட்டங்கள்
இந்தியாவில் கடந்த, 10 நாட்களில், மராட்டியம், டெல்லி, தமிழகம், அரியானா, மேற்கு வங்காளம், ஜம்மு – காஷ்மீர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாக, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலம் தான் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதை அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக, 1,800ஐ கடந்து காணப்படுகிறது. 3-வது இடத்தல் இருக்கும் டெல்லியில், தினமும், 1,300 பேர் வைரசால் பாதிக்கப்படுகின்றனர்.
அரியானாவில், பாதிப்பு எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஜம்மு – காஷ்மீரில் இரட்டிப்பாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.
தேசிய அளவில், உள்ள இறப்பு விகிதத்தை விட, 13 மாநிலங்களிலிருக்கும், 69 மாவட்டங்களில், இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. தேசிய அளவில், இறப்பு விகிதம், 2.90 சதவீதமாக உள்ளது. மே மாதம் 18-ந் தேதி முதல் 69 மாவட்டங்களில், இறப்பு விகிதம், 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.