June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னயைில் கொரோனாவை கட்டுப்படுத்த மைக்ரோ திட்டம்

1 min read
Micro Plan to Control Corona in Chennai

13-6-2020
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மைக்ரோனா திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி சென்னை மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது:-

மைக்ரோ திட்டம்

தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மைக்ரோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் படி 15 மண்டலங்களில் 200 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 11,500 பணியாளர்களை கொண்டு இக்குழுவினர் சென்னையில் தினந்தோறும் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துவர் .

அவர்கள் கொரோனா தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.