இந்தியாவில் ஒரே நாளில் 11,502 பேருக்கு கொரோனா
1 min read
corono affected 11,502 person overnight in India
15-6-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
11,502 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலவத்தை மத்தய சுகாதாரத்துறை தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ( திங்கட்கிழமை காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரசால் 11,502 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் தற்போது ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 106 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 798 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
325 பேர் சாவு
கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் கொரோனா வைரசால் 325 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாநில வாரியாக…
இந்தியாமு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கனி எண்ணிக்கயைும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் (அடைப்புக்குறிக்குள்) மாநிலம் வாரியாக வருமாறு:-
மராட்டியம் – 1,07,958(3,950)
தமிழ்நாடு- 44,66 (1435)
டெல்லி -41,182 (1,327)
குஜராத்-23,544 (1,477)
உத்தரபிரதேசம்-13,615 (399)
ராஜஸ்தான்-12,694 (292)
மேற்கு வங்காளம்- 11,087 (475)
மத்திய பிரதேசம்-10,802 (459)
அரியானா-7,208 (88)
கர்நாடகா-7,000 (86)
பீகார்-6,470 (39)
ஆந்திரா -6,163 (84)
காஷ்மீர்-5,041 (59)
தெலுங்கானா-4,974 (185)
அசாம்-4,049 (8)
ஒடிசா-3,909 (11)
பஞ்சாப் 3,140 (67)
கேரளா-2,461 (19)
உத்தர்காண்ட்-1,819 (24)
ஜார்க்கண்ட்-1,745 (8)
சத்தீஸ்கர்-1,662 (8)
திரிபுரா-1,076 (1)
கோவா-564 (0)
லடாக்-549 (1)
இமாச்சல பிரதேசம்-518 (7)
மணிப்பூர்-458(0)
சண்டிகர்-352(5)
புதுச்சேரி-194 (5)
நாகலாந்து-168 (0)
மிசோரம்-112(0)