கொரோனாவால் அதிகரித்து வரும் சாவு; கட்டுப்பாடுகளை அதிகரிக்க மக்கள் ஆதரவு
1 min read
Increased death by corona; Support people to increase control
15-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் இறந்துள்ளனர். நாள்தோறும் சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
44 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் இறப்பு என்பது மிக குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக இறப்பும் அதிகரித்து வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் குறித்து
இன்று மாலை சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( திங்கட்கிழமை) ஒரே நாளில் கொரோனாவால் 44 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இறந்தவர்களில் 12 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள். மற்றுவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள்..
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 46,504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டுமு் 797 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 18,403 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 7,29,002 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் ஆலோசனை
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா குறைய ஆரம்பித்தாலும் 3 மாதத்துக்குப் பின் மீண்டும் அதிகரிக்கும். சீனாவில் 2-வது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்திலும் 3 மாதத்துக்குப் பின் ஆரம்பிக்கலாம்.
அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும், மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்.
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கடுமையாக்கலாம்
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். கடைகள் திறக்கப்படுவதை விட வண்டிகளில் தெருதெருவாக கொண்டு காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்வதை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு வார்டு வாரியாக குழு அமைத்து பொதுமக்களை கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளை திறக்க கூடாது. ரேஷன் பொருட்களையும், உதவித் தொகையைும் வீடுவீடாக சென்று வழங்க வேண்டும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர். காஞ்சிபுரம் மாவட்டங்களை தமிழகம் முழுவதும் கூட இன்னும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்.