காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி
1 min read
16.6.2020
A female IPS officer who came to the police station to file a complaint
பாேலீஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிப்பது வழக்கம். இதே போல் நேற்று கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா போலீஸ் நிலையத்துக்கு நேற்று ஒரு இளம் பெண் சென்றார். அங்கு இருந்த போலீசாரிடம் தமிழ் கலந்த மலையாளத்தில் பேசிய இளம்பெண், தான் பஸ்சில் வரும்போது தனது பேக் காணாமல் போனதாகவும், அது தொடர்பாக புகார் அளிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.
அவரது பேச்சின் மூலம் தமிழகத்தை சேர்ந்தவர் என அறிந்த போலீசார், சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம்செய்ய கூறிவிட்டு நாற்காலியில் அமர வைத்துள்ளனர். மக்கள் தொடர்பு அதிகாரியான ஷாஜி என்ற போலீஸ்காரர் அவரிடம் விபரங்களை கேட்டார். அப்போது அந்த இளம் பெண், தான் ஒரு துணிக்கடையில் பணியாற்றுவதாகவும், பஸ்சில வரும்போது தனது கைபையை யாரோ திருடியதாகவும் கூறியுள்ளார். அவரிடம் இதை ஒரு புகாராக எழுதி கொடுக்குமாறு ஷாஜி கூறியுள்ளார்.
இதையடுத்து இளம்பெண் புகார் எழுதி ெகாடுத்தார். தொடர்ந்து ஷாஜி, அரசு போக்குவரத்து கழக அதிகாரியை தொடர்பு கொண்டு விபரத்தை கூறியுள்ளார். பின்னர் இளம்பெண் புறப்பட தயாரானார். அவரிடம் புகாருக்கு ரசீது வாங்கி செல்லுமாறு போலீசார் கூறினர். தனக்கு ரசீது ேதவையில்லை என இளம்பெண் கூறினார். ஆனால் கண்டிப்பாக ரசீது வாங்கி செல்ல வேண்டும் என கூறி ரசீதை கொடுத்தனர்.
அப்போது அந்த இளம்பெண், தான் புதிதாக பொறுப்பேற்ற பெரிந்தல்மண்ணா ஏஎஸ்பி ேஹமலதா என போலீசாரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து எழுந்து சல்யூட் அடித்தனர். புதிதாக பாெறுப்பேற்ற அதிகாரி என்பதால் போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் சிறப்பாக பணி புரிந்ததாக பாராட்டிய ஹேமலதா, குறிப்பாக காவலர் ஷாஜிக்கு சிறப்பு பாராட்டு தெரிவித்தார்.
இப்படி காவல் நிலையத்தில் அதிரடி காண்பித்த ஹேமலதா ஈரோடு அருகே ெநருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். அண்ணா பல்கலையில் விவசாய பொறியியல் படிப்பில் இளங்கலை படித்த இவர், நீர்வள மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்றார்.
இவரது கணவர் கார்த்திக் ஐஎப்எஸ் (வனத்துறை) அதிகாரி. இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் பணியாற்றி வருகிறார். முதலில் பாலக்காடு மாவட்டம் அகழியில் ஏஎஸ்பியாக பொறுப்பேற்ற ஹேமலதா கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் ெபரிந்தல்மண்ணா ஏஎஸ்பியாக பொறுப்பு ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.