ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த சிறுமி பலி
1 min read
17.6.2020
girl kills herself after being intimidated by porn videoவேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் குளிக்கும்போது வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த கணபதி(18), பென்னாத்தூர் ஆகாஷ்(20) மற்றும் சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஆபாச வீடியோ எடுத்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் தாங்கள் அழைக்கும்போது வராவிட்டால் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டினார்களாம். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி கடந்த 12ம்தேதி தீக்குளித்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில் கணபதி உள்பட 3பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களில் 17 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கணபதி பார்ஸ்டல் பள்ளியிலும், ஆகாஷ் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.