June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அகற்றும் பணியில் பிளஸ்-2 மாணவர்

1 min read
Plus-2 student in the process of removing the bodies of the dead by Corona

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அகற்கும் பணியில் பிளஸ்-2 மாணவர் ஈடுபட்டு வருகிறார்.

பிளஸ் – 2 மாணவர்

டெல்லி லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரிக்கு போனால் அந்த நெஞ்சை நொறுக்கும் காட்சியை தினமும் பார்க்க முடியும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சை செய்தும் பலனற்றுப்போய் இறந்து போகிறவர்களின் உடல்களை ஆஸ்பத்திரி வார்டில் இருந்து அகற்றுவதும், பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி மின்தகன மையத்துக்கோ அல்லது இடுகாட்டுக்கோ கொண்டு சென்று இறுதிச்சடங்குக்கு ஒப்படைப்பதுமான ஆபத்தான பணியை பிளஸ் 2 மாணவர் தினமும் செய்து வருகிறார்.

அவரது பெயர் சந்த் முகமது. வட கிழக்கு டெல்லி பகுதியில் அமைந்துள்ள சீலாம்பூரை சேர்ந்தவர். வறுமையிலேயே பிறந்து வளர்ந்தவர். ஒரு டாக்டராக வேண்டும் என்பதுதான் இவரது ஆசை. ஆனால் குடும்பச்சூழலோ அதற்கு உகந்ததாக இல்லை. ஒரு வேளை சாப்பாடு தினமும் கிடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

பிணம் அகற்றும் பணி

பெற்ற தாய் தைராய்டு நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருகிறார். அந்த தாயின் சிகிச்சைக்கோ பணம் இல்லை. ஆனாலும் தாயின் உயிரை பிடித்து வைத்துக்கொள்ள மருந்து கண்டிப்பாக வேண்டுமே. படிக்கும்போது என்ன வேலை செய்யலாம்? ஆனாலும் அவரது அண்ணன் கிருஷ்ணா மார்க்கெட்டில் வேலை செய்து ஓரளவு குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா வந்துவிட்டது. இதனால் அவரது அண்ணனை வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

குடும்பத்தில் வறுமை வாட்டியது. இனி என்ன வழி என யோசித்தபோது, சந்த் முகமதுவுக்கு தான் வேலைக்கு போவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒரு வாரத்துக்கு முன்பு நிறுவனங்களுக்கு பணியாட்களை வினியோகிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனம், அவருக்கு தந்த வேலைதான், லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளி வேலை. எப்படிப்போகிறது வேலை?

அந்த வேலையைப்பற்றி அவரே சொல்கிறார்…

எனக்கு தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை. எனது அனைத்து ஆசைகளையும் எண்ணங்களையும் ஒதுக்கிவைத்து விட்டுத்தான் இந்த வேலையை நான் தேர்ந்தெடுத்தேன். இது ஓர் ஆபத்தான வேலை என்பது எனக்கு தெரியும். கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து ரொம்பவும் அதிகம்தான். ஆனால் வேறு வழியில்லை.

எனக்கு ஒரு வேலை வேண்டும். எனக்கு ஒரு மூத்த சகோதரர் மட்டுமல்ல, 3 சகோதரிகளும், பெற்றோரும் இருக்கிறார்கள். என் சகோதரிகள் பள்ளி மாணவிகள்.. நான் இன்னும் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை. இதற்கெல்லாம் பணம் வேண்டும். பணத்துக்காக தவிக்கிறோம். எங்களுக்கு சாப்பாடு வேண்டும். என் அம்மாவுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கித்தரவேண்டும்.

பல நேரங்களில் எங்கள் வீட்டில் ஒரு வேளை சாப்பாடுதான். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாங்கள் பிழைக்க வழி இருக்கலாம். ஆனால் படடினியில் இருந்து பிழைக்க முடியாது. எனது முதல் மாத சம்பளம், குடும்பத்தின் கஷ்டத்தை ஓரளவு தீர்க்கும் என்று நம்புகிறேன்.

தினமும் வேலைக்கு போவற்கு முன்பு நான் தொழுகை நடத்துவேன். தொழுதுவிட்டுத்தான் வீட்டை விட்டு வெளியே வருவேன். எனக்கு இறைநம்பிக்கை உண்டு. இறைவன்தான் என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். எனக்கு ஒரு பாதையைக் காட்ட வேண்டும்.

என்ன, நான் வேலை செய்கிற இடத்தில் காப்பீடு கூட கிடையாதுதான். ஆனால் உலகத்தில் இந்த நாளில் மிகவும் ஆபத்தான வேலை இப்போது நான் செய்யும் வேலைதான். இந்த வேலைக்கு எனக்கு மாத சம்பளம் ரூ.17 ஆயிரம்.

தினமும் போராட்டம்தான்… 2 அல்லது 3 உடல்களை என் சக தொழிலாளி ஒருவருடன் சேர்ந்து வார்டில் இருந்து ஆம்புலன்சுக்கு எடுத்துச்சென்று ஏற்ற வேண்டும். அங்கிருந்து தகன மையத்துக்கு ஆம்புலன்சில் உடன் போக வேண்டும். அங்கிருந்து ஸ்ட்ரெச்சரில் உடலை இறக்கி தகன மையத்தில் தகனம் செய்வதற்கு தூக்கிக்கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும்.

எல்லாவற்றையும் இந்த கவச உடையை அணிந்து கொண்டுதான் செய்தாக வேண்டும். இது மிகவும் கனமாக இருக்கிறது. இதை அணிந்து கொண்டு வேகமாக இயங்க முடியாது. மூச்சு திணறும். இந்த உடை அணிந்திருப்பதால் ஏற்படுகிற உஷ்ணத்தில் தினந்தோறும் வியர்வையில் குளிக்கிறேன்….

தொழுகை

இப்படித்தான் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு உடலை அகற்றும் போது எனக்கு உதவிக்கு ஆளில்லை. சிறிது நேரம் பிடித்தது. அந்த உடலை கேட்டு யாருமே வராமல் ஒரு மாதத்துக்கு மேலாக சவக்கிடங்கில் கிடந்ததாக டாக்டர் சொல்லக்கேட்டேன். அந்த உடலை கட்டிக்கொடுத்த நபர், அதை சரியாக கூட கட்டித்தரவில்லை. உடலை நான் ஆம்புலன்சில் ஏற்றவும், இறக்கவும் படாதபாடு பட்டேன். உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கியபோது, அதன் மேல் உறை கழன்று வந்து விட்டது அதில் இருந்த ரசாயன திரவம் என் தொடைகளில் சிந்தி பரவியது. என்ன செய்ய….

என் பெற்றோர் என் வேலையைப் பற்றி தினமும் கேட்பார்கள். அவர்கள் என் பாதுகாப்புக்காக தொழுகை நடத்துகிறார்கள். எனது அம்மா ரொம்பவும் அழுகிறார். ஆனால் என்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிகிறது.

வீட்டுக்கு வந்த உடன் குளிக்க போய்விடுவேன். குடும்பத்தினருடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக்கொள்கிறேன். எல்லா பாதுகாப்பையும் பின்பற்றத்தான் செய்கிறேன். ஆனால் நமக்கு தெரியாது, இதுவரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.. ஆனால்

பின்னர் என்ன நடக்கும் என்பதை பற்றி சிந்திக்க இப்போது நேரம் இல்லை.. அதற்குள் பிணங்களை அவரை அழைக்கின்றன…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.