June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும்- போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் பேட்டி

1 min read
Police Commissioner A.K.Viswanathan told about curfew in Chennai

19-6-2020
சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு

கடுமையாக பின்பற்றப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் இன்று முதல் 30 -ந் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகி ய 4 மாவட்டங்கிளல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் அனுமதியின்றி வாகனங்கள் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை முதல் சென்னயைில் வாகன போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது. காய்களி, பால் வாகனம் போன்றவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று காலை சென்னை

வாலாஜா சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாகனங்களின்

நடமாட்டத்தை ட்ரோன் மூலம்

கண்காணித்தார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் ஊரடங்கு 12 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊடரங்கு கடுமையாக பின்பற்றப்படும். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வெளியே

வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க

வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே வருபவர்கள் வாகனங்களில் வரக்கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல்

செய்யப்படும்.

கடைகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அங்கே விதிமுறைய பின்பற்றாமல் நோய்த்தொற்று பரவும் சூழல் இருந்தால் கடைகள் மூடப்படும். வணிக நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கைகள்

எடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

===

தகவல்- மூத்த பத்திரிகையாளர் தி.பாலசுப்பிரமணியன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.