தமிழகத்தில் ஒரே நாளில் 2,532 பேர் கொரோனா- 53 பேர் சாவு
1 min read
2,532 Person affected for Corona and death 53
21-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இன்று ஒரே நாளில் 53 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
2,532 பேருக்கு கொரோனா
தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்றை கொரோனா நிலவரம் பற்றிய தகவலை மாநில சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,493 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,438 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். . இதுவரை 32,754 பேர் குணமடைந்துள்ளனர்.
53 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 53 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 14 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை தமிழகத்தில் மொத்தம் 757 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மாவட்டம் வாரியாக…
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் விவரம் மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர் 420
செங்கல்பட்டு 3,745
சென்னை 41,172
கோயம்புத்தூர் 268
கடலூர் 765
தருமபுரி 35
திண்டுக்கல் 305
ஈரோடு 85
கள்ளக்குறிச்சி 387
காஞ்சிபுரம் 1,159
கன்னியாகுமரி 168
கரூர் 115
கிருஷ்ணகிரி 63
மதுரை 705
நாகப்பட்டினம் 202
நாமக்கல் 94
நீலகிரி 29
பெரம்பலூர் 150
புதுக்கோட்டை 70
ராமநாதபுரம் 299
ராணிப்பேட்டை 470
சேலம் 335
சிவகங்கை 75
தென்காசி 241
தஞ்சாவூர் 272
தேனி 200
திருப்பத்தூர் 68
திருவள்ளூர் 2,534
திருவண்ணாமலை 1,060
திருவாரூர் 218
தூத்துக்குடி 577
திருநெல்வேலி 640
திருப்பூர் 123
திருச்சி 266
வேலூர் 477
விழுப்புரம் 581
விருதுநகர் 203
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை -261
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)- 138
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 401
இவர்களையும் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59,377 ஆகும்.