June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பக்தர்கள் இன்றி பூரி தேரோட்டம்-சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

1 min read

PTI7_14_2018_000073B


Supreme Court permits of Poori Car festivel with out pilgrims

22-6-2020

பூரி ஜெநாதர் கோவில் தேரோட்டத்தை பக்தர்கள் இன்றி நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கின் போது கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மூடப்பட்டன. சம்பிராய பூஜைகளை மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வருடாந்தர திருவிழாக்களுக்குகூட அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது சில மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் திருவிழாக்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

பூரி ஜெகநாதர் கோவில்

இந்த நிலையில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தை கட்டுப்பாட்டுடன் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது
அது பற்றிய விவரம் வருமாறு:-
ஒடிசா மாநிலம் பூரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் சிறப்பாக நடக்கும்.

பூரி தேரோட்டடம் நியதிபடி நாளை (செவ்வாய்க்கிழமை) நடந்திருக்க வேண்டும். ஆனால் ஒடிசா விகாஷ் பரிசத் என்ற தொண்டு நிறுவனம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், “தற்போது கொரோனா பரவுதல் உள்ள நிலையில் கோவில் தேரோட்டம் நடந்தால் சாமியை தரிசிக்க லட்சக் கணக்கில் பக்தர்கள் கூட்டம் கூடும். கொரோனா பரவ அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை தடைவிதிக்க வேண்டும்” என கூறியது. இந்த மனுவின் மீது நடந்த விசாரணையை அடுத்து கோவில் தேரோட்டத்தை நடத்த தடை விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து 2 அமைப்புகள் சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன. அதேபோல் மத்திய அரசு சார்பிலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் மத்திய சொலிசிட்டர் துஷார் மேத்தா மனுத்தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டதாவது :-
பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதனை தடை செய்வது பக்தர்களின் இறை நம்பிக்கையில் தலையிடுவதாகும். வேண்டுமானால், பக்தர்களுக்கு தடை விதித்து தேரோட்டத்தை நடத்த அனுமதிக்கலாம். எனவே ஜூன் 18 ல் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டுகிறோம். ஜெகந்நாதர் ஒரு வருடம் வெளியே வராவிட்டால் 12 வருடங்கள் வரமுடியாது. இது மரபாக இருந்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

பக்தர்கள் இன்றி தேரோட்டம்

விசாரணையின் முடிவில், பூரி கோவிலில் தேரோட்டம் நடத்த சுப்ரீம்கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆனால் சில முக்கிய கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில், பக்தர்கள் இன்றி, தேரோட்ட விழா நடத்தலாம். ஆனால் சுகாதார பிரச்சினையில் மத்திய மற்றும் மாநில அரசு எவ்வித சமரசமும் செய்யகூடாது. 3 கி.மீ தூரம் வரை சமூக இடைவெளியை பின்பற்றவும், கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அரசுக்கு அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, ரத யாத்திரை நாளில் பூரி நகரத்தை முற்றிலுமாக மூடினால் கோவில் சேவகர்களை தவிர பக்தர்கள் வெளியே வரமாட்டார்கள். அதனால் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.