டிக்-டாக் புகழ் சூர்யா தற்கொலை முயற்சி
1 min read
22.6.2020
Surya suicide attemptதிருப்பூர் அய்யம்பாளையம் சபரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் டிக்-டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா(34). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி சுற்றுலா விசா மூலம் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான சேவை தொடங்கிய பின் சிங்கப்பூரில் இருந்து சூர்யா கடந்த 16ம் தேதி விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
ஆனால் வெளியூர் சென்று வந்த அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாரா என தெரியாத காரணத்தால் அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவரை கொரோனா பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்கு பின்னர் சூர்யா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் டிக்-டாக் செயலி மூலம் தன்னை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பூண்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், ரவுடி பேபி சூர்யா மீது வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சூர்யாவின் ஆண் நண்பர் ஒருவர் வந்திருந்தார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை சூர்யா வீட்டுக்கு சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் வந்ததை அருகில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். அப்போது சூர்யாவை ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அதிகாலை நேரம் சூர்யா தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. டிக் டாக் புகழ் சூர்யா உண்மையில் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது விளம்பரத்துக்கு செய்தாரா என்பது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.