தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 35,339 பேர் குணம் அடைந்துள்ளனர்
1 min read
35,339 people cure from corona in Tamil nadu
23-6-2020
தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து இதுவரை 35,339 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் குணம் அடைந்து வருவோரின் எண்ணிக்கையும் கூடி வருவது ஆறுதல்.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மட்டும் 2,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 44,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 156 பேருக்கும், செங்கல்பட்டில் 146 பேருக்கும், மதுரையில் 137 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
39 பேர் சாவு
இன்று சென்னையில் 21 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருச்சியில் தலா 2 பேரும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை மற்றும் சேலத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 28 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 11 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 28,428 பேர் சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சற்று குறைவு
தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவில் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்தது.
ஆனால் இன்று(செவ்வாய்க்கிழமை) சற்று குறைந்து 2,516 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 25148 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 9,44,352 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று 23921 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 9,00,712 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அவர்களில் வெளியில் இருந்தவர்களின் எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள்ளும் போடப்பட்டு உள்ளது.
சென்னை 1,380
செங்கல்பட்டு 146
கோவை 12
கடலூர் 29(1)
தர்மபுரி 11(2)
திண்டுக்கல் 44
ஈரோடு 5
கள்ளக்குறிச்சி 43(6)
காஞ்சிபுரம் 59
கன்னியாகுமரி 9
கரூர் 3
மதுரை 137
நாகப்பட்டினம் 2
நாமக்கல் 1
நீலகிரி 17(2)
பெரம்பலூர் 12
புதுக்கோட்டை 2
ராமநாதபுரம் 22(4)
ராணிப்பேட்டை 29
சேலம் 7
சிவகங்கை 20(1)
தென்காசி 11
தஞ்சாவூர் 14(1)
தேனி 48
திருப்பத்தூர் 1
திருவள்ளூர் 156
திருவண்ணாமலை 114(4)
திருவாரூர் 10
தூத்துக்கடி 38
திருநெல்வேலி 5(3)
திருச்சி 41(1)
வேலூர் 36
விழுப்புரம் 9
விருதுநகர் 26
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் 10
உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்கள் 4
மொத்தம் இன்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 64, 603
குணம் அடைந்தவர்கள்
மாவட்ட வாரியாக குணம் அடைந்தாார் விவரதம் வருமாறு-
அரியலூர் 389
செங்கல்பட்டு 2,027
சென்னை 24,670
கோயம்புத்தூர் 164
கடலூர் 509
தருமபுரி 18
திண்டுக்கல் 220
ஈரோடு 72
கள்ளக்குறிச்சி 311
காஞ்சிபுரம் 611
கன்னியாகுமரி 100
கரூர் 89
கிருஷ்ணகிரி 32
மதுரை 405
நாகப்பட்டினம் 72
நாமக்கல் 86
நீலகிரி 17
பெரம்பலூர் 146
புதுகோட்டை 36
ராமநாதபுரம் 134
ராணிப்பேட்டை 297
சேலம் 210
சிவகங்கை 53
தென்காசி 110
தஞ்சாவூர் 134
தேனி 129
திருப்பத்தூர் 41
திருவள்ளூர் 1,470
திருவண்ணாமலை 509
திருவாரூர் 108
தூத்துக்குடி 415
திருநெல்வேலி 432
திருப்பூர் 116
திருச்சி 179
வேலூர் 114
விழுப்புரம் 396
விருதுநகர் 140
விமான நிலையத்தில் தனிமை 127
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 59
ரெயில் நிலையத்தில் தனிமை 192
மொத்த எண்ணிக்கை 35,339