June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மாவட்டத்திற்குள் விமானம், கப்பல் மூலம் 3,640 பேர் வருகை : கலெக்டர் தகவல்

1 min read


3,640 arrivals in tirunelaveli by airplane and ship

23-6-2020

விமானம், கப்பல் மூலம் இதுவரை 3,640 பேர் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளதாக கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கண்காணிப்பு

நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள் மற்றும் அனைத்து சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகள் மூலம் காண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் உரிய அனுமதி சீட்டு பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் பிற மாநிலத்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் ஒரு வாரம் கண்காணிக்கப்பட்டு அதன் பின்னர் 2-வது பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னர்தான் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

3,640 பேர் வருகை

கடந்த 21-ந் தேதி படி வெளிநாட்டில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் இதுவரை 3,640 பயணிகள் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 11,200 பயணிகள் வந்துள்ளனர். மேற்கண்ட அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது நெல்லை மாநகராட்சி பகுதியில் 25 வார்டுகளும், 6 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மூலம் கபசுர குடிநீர் மற்றும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று

நெல்லை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை0 மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.