June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு; கலெக்டர் அறிவிப்பு

1 min read


Full Curfew in the Theni district from tomorro

23-6-2020

தேனி மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மாலை முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் பல்லி பல்தேவ் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வந்தது. இதனால் சென்னை மட்டும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 30-ந் தேதி வரை ஊரங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல்வேறு மாவட்டங்களில் கொரோன பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில், நோய் பரவலை தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதை பரிசீலனை செய்த அரசு, மதுரை மாவட்டத்தில், முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு

இந்த நிலையில் தேனி மாவட்டத்திலும் நாளை(புதன்க்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாளை (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் மறு உத்தரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கின் போது, காய்கறி,மளிகை, உள்ளிட்ட கடைகள் மதியம் 2 மணி வரை செயல்படும், ஓட்டல்கள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை ஆகியன திறக்க அனுமதியில்லை.

கடும் கட்டுப்பாடு

கம்பம், தேனி, போடி நாயக்கனூர், கூடலூர், சின்னமனூர் பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள் இயங்காது.
இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் மாவட்ட பல்லி பல்தேவ் அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.