எல்லையில் நடந்த மோதலில் சீனர்கள் யாரும் சாகவில்லையாம்
1 min read
China has denied the death of 43 soldiers
24-6-2020
எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 43 பேர் இறந்தனர் என்று கூறப்பட்ட தகவலை சீன அரசு மறுத்துள்ளது. இதில் சீனர்கள் யாரும் சாகவில்லை என்று கூறுகிறது.
20 வீரர்கள் மரணம்
லடாக் அருகே இந்தியா-சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதயில் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த 15-ந் தேதி இரவு மோதல் ஏற்பட்டது. அவர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்புதான் பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், இந்திய வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதில் தமிழக வீரர் பழனியும் ஒருவர்.
இந்த மோதலில் சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் இதுபற்றி இதுவரை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மறுப்பு
இந்த நிலையில், தற்போது தங்கள் நாட்டு வீரர்கள் 43 பேர் இறந்ததை மறுத்துள்ளது.இந்திய – சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்த விஷயத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இரு தரப்பும் உறுதி அளித்துள்ளன. தற்போது இதை மட்டுமே கூற விரும்புகிறேன்.
சீன வீரர்கள் யாரும் சாக வில்லை
இரு தரப்பு பேச்சில், படைகளை விலக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டதா என்பது பற்றி தற்போது தெரிவிக்க முடியாது. துாதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வான் பகுதியில் நடந்த மோதலின் போது, சீன வீரர்கள், 40 பேர் உயிரிழந்ததாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஊடகங்களில் தான் இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன.
இந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.