சென்னையில் இருந்து காரில் சொந்த ஊர் வந்த பேராசிரியருக்கு கொரோனா
1 min read
குடும்பத்தோடு சொந்த ஊர் வந்த கல்லூரி பேராசிரியருக்கு கொரோனா
நெல்லை மருத்துவமனையில் அனுமதி
24.6.2020
Corona to the professor who came home from Chennaiநெல்லை மாவட்டம், வி.கே.புரம் அடுத்த சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி நர்மதா தெருவைச் சேர்ந்த 44 வயதானவர், சென்னையில் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பணியின் காரணமாக அங்கேயே மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து கடந்த 19ம் தேதி தனது குடும்பத்தினர் 4 பேருடன் காரில் புறப்பட்டு சொந்த ஊர் திரும்பினார்.
இதையடுத்து தனிமைபடுத்தப்பட்ட அவர்களுக்கு அன்றைய தினமே (19ம் தேதி) அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பேராசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து அவரை மீட்ட சுகாதாரத் துறையினர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்து மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேரும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, சிவந்திபுரம் ஊராட்சி செயலாளர் வேலு, சுகாதார மேஸ்திரி பெல்பின் உள்ளிட்டோர் அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டனர். தடுப்பு வேலிகள் அமைத்து அப்பகுதியை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.