கணவனின் கொடுமை தாங்கல… துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு முதல்வருக்கு பெண் மனு
1 min read
24.6.2020
Woman petition to the Chief Minister asking for a gun licenseகேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கற்றானம் பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறத்திக்காடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் தினமும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், உரிய நடவடிக்க எடுக்குமாறும் தெரிவித்திருந்தார்.
போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் போலீஸ் நடவடிக்கையில் இளம்பெண்ணுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவர் தினமும் தன்னை தாக்கி கொடுமைப்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கணவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே என்னை காப்பாற்றிக்கொள்ள, துப்பாக்கி பயன்படுத்த லைசென்ஸ் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதையடுத்து குறத்திக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த இளம்பெண்ணுக்கு இது 3வது திருமணம் ஆகும். அவரது கணவருக்கு இது 2வது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Bottom of Form