விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர் சுட்டுக்கொலை
1 min read
Vishwa Hindu Parishad man shot dead
27-6-2002
மத்திய பிரதேசத்தில் விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர் ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர்
மத்திய பிரதேசம் ஹோஷங்காபாத் மாவட்டம் விஸ்வ இந்து பரிஷத் கௌ ரக்சா பிரிவின் மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தவர் ரவி விஸ்வகர்மா(வயது35) பசு காவலரான இவர் ஹோஷங்காபாத்தில் இருந்து 2 பேருடன் காரில் வந்து கொண்டிருந்தார்.
போபாலில் இருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள பிபாரியா நகரில் வரும்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரது காரை வழிமறித்துள்ளது. அவாகள் தங்கள் முகத்தை துண்டால் சுற்றி மறைத்து இருந்தனர்.
அந்த கும்பல், ரவி விஸ்வகர்மாவின் காரை தாக்கினர். பின்னர் அந்தக் குபம்பலில் ஒருவன் ரவி விஸ்வகர்மாவை துப்பாக்கியால் சுட்டான். அப்போது காரில் மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் ரவி விஸ்வகர்மாவை காரில் இருந்து கீழே இழுத்து கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் தாக்கினார். இதில் அவர் பரிதாபமான இறந்தார்.
இந்த சம்பவத்தை அந்த வழியாக சரக்கு வாகனத்தில் வந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அதை சமூக வலை தளத்தில் பதிந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
முன்பகை காரணமாக இக்கொலை நடந்ததாகவும், கொலை தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிந்து, தப்பியோடியவர்களை தேடி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.