கொரோனாவுக்கு மருந்தை கண்டு பிடித்த ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை தொடங்கியவர் ஒரு தமிழர்.
1 min read
The founder of the favorite 'Bharat Biotech' is a Tamil.
5-7-2020
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா என்ற தமிழர் ஆவார்.
கொரோனாவுக்கு தடுப்பூசி
உலகையே அச்சுறுத்த வரும் கொரோனாவுக்கு பல்வேறு நாடுககள் தடுப்பு மருந்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. ஆனால் இன்னும் அதிகாரப் பூர்வமாக எந்த மருந்தும் கண்டறிந்து அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன.
இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது.
வருகிற ஆகஸ்டு மாதம், 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது.
தமிழர்
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் ஒரு தமிழர். அவரது பெயர் கிருஷ்ணா எல்லா. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர். ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் பட்டப்படிப்பை முடித்ததும் ‘பேயர்’ என்ற மருந்து கம்பெனியில் பணியில் சேர்ந்த இவர், ‘பிரீடம் பிரம் ஹங்கர்’ எனும் உதவித்தொகை கிடைக்க, அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார்.
ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் முடித்தார்.
இவர் முதலில் வெளிநாட்டில் தங்கி வேலை செய்யவே விரும்பினார். ஆனால் இவரது தாய் வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்ல வேண்டும் என்று கூறியதால் இந்தியா வந்து, மருந்து நிறுவனத்தை தொடங்கினார்.
1996-ம் ஆண்டு ஐதராபாத்தில் சிறிய பரிசோதனை கூடத்ததை நிறுவினார். அதன்பின் பொதுச் சுகாதாரத் துறையின் பாதுகாப்பில் பங்கு வகிக்க விரும்பினார். மலிவு விலையில் ஹெபடைடிஸ் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். மற்ற நிறுவனங்கள் அந்த மருந்துக்கு 40 டாலர் என விலை நிர்ணயிக்க, வெறும் ஒரு டாலருக்கு மருந்து கிடைக்கும் என அறிவித்தார்.
அரசின் நிதிஉதவி கிடைக்காத போதும், வங்கி கடனாக ரூ.2 கோடி பெற்று மருந்து தயாரிப்பில் அவரது நிறுவனம் ஈடுபட்டது. 1999-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், இவரது மலிவு விலை ஹெபடைடிஸ் மருந்தை வெளியிட்டார்.
இவரது பாரத் பயோடெக் நிறுவனம் தான், உலக அளவில் ஸிகா வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. 1996-ம் ஆண்டு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அனுமதி அளித்து, இவருக்கு நிலம் அளித்தார். தனது ஹெபடைடிஸ் மருந்து உற்பத்தி ஆலையை அங்கு அமைத்தார். அங்கு தற்போது 100க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன.
இதனை தொடர்ந்து பெங்களூரு, பூனேயில் மேலும் இரு உயிரியல் தொழில்நுட்ப பூங்காக்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.
கிருஷ்ணா எல்லாவுக்கு 100க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.