June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சீனாவில் பரவும் பூபானிக் பிளேக்

1 min read
The Bhubanic Plague, which originates in China

6-7-2020

சீனாவில் புதிதாக பூபானிக் பிளேக் என்ற நோய் பரவி வருகிறது. இந்த நோய் கண்டவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் 24 மணி நேரத்தில் மரணத்தை தழுவுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பிளேக் நோய்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் கொரோனா நோய் பரவத் தொடங்கியது. அந்து உலக நாடுகளில் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் ஏராளமானேோர் உயிரை பறித்துள்ள இந்த நோயை குணமாக்க இன்னும் அதிகார பூர்வமாக மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. மருந்து கண்பிடிக்க தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவில் புதிதாக பூபானிக் பிளேக் என்ற நோய் பரவத்தொடங்கி உள்ளது. சீனாவின் தன்னாட்சி பிரதேசமான தெற்கு மங்கோலியா, கோவட் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது மற்றும் 17 வயதுள்ள சகோதரர்களுக்கு, பூபானிக் பிளேக் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மர்மோட் என்று அழைக்கப்படும் பெரிய அணில் அல்லது எலி இறைச்சியை சாப்பிட்டதால் இந்த நோய் வந்ததாக கூறப்படுகிறது. விலங்குகளிடம் இருந்து பரவும் இந்த நோய் சிறு பூச்சிகள் வழியாகத்தான் மனிதனை அண்டுகிறது. இந்த நோய் வந்த விலங்குகளில் இருந்து வெளிவரும் ஒரு வகை திரவம் மூலமும், எர்சினியா என்ற பாக்ட்ரீயா மூலமும் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.

சீனாவில் இந்த நோய் பரவிவருவதால் மங்கோலியா உட்பகுதியில், பிளேக் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான மூன்றாம் கட்ட எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மர்மோட் இறைச்சியை மக்கள் உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

இந்த நோய் கண்டவர்கள் உடனடிகாய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது,

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.