கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா; முதல்-மந்திரி அறிவுரை
1 min read
Corona heading back to Kerala; Advice from the First-Minister
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா; முதல்-மந்திரி அறிவுரை
12-7-2020
கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த அம்மாநில முதல் மந்திரி கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
கேரளாவில் கொரோனா
இந்தியாவில் குறிப்பாக தென்மாநிலங்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரளாவில்தான். பெரும் பீதியையும் பரபரப்பபையும் ஏற்படுத்திய நிலையில் டாக்டர்கள் தைரியமாக போராடி கொரோனா பாதித்தப் பெண்ணை குணம் ஆக்கினார்கள். இது இந்தியா முழுமைக்கும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஆனால் அதன்பின் மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கேரளாவில் கட்டுப்பாட்டுடன் இருந்தது.
மீண்டும்
இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 6,950 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 27 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,820 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,103 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கிறார்கள்.
இது தொடர்பாக அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாம் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய நேரம் இது அல்ல. நாம் கொரோனா தொற்றுக்கான போரில் அதிகம் தியாகம் செய்துள்ளோம்.
ஆரம்பத்தில் கொரோனா பரவலை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். மீண்டும் முன்புபோல் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பாதிப்புகளை குறைக்க முடியும். அது நிச்சயம் சாத்தியமாகும்.
பாதிப்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதும் நமக்கு தெரியும். ஆயினும் நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.