June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 31-ந் தேதி வரை ரெயில்கள் ரத்து

1 min read
Trains canceled in Tamil Nadu till July 31

14-7-2020

தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

ரெயில் போக்குவரத்து

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. அதன்பின் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சிற்சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அதன்படி வெளிமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு ரெயில்ள் இயக்கப்பட்டன.

அதன்பின் மேலும் சிற்சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன. இதன் காரணமாக தமிழகத்தில் திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோவை- காட்பாடி சிறப்பு ரயில்களும், அரக்கோணம் – கோவை இண்டர்சிட்டி ரெயில்கள், கோவை மயிலாபுதுறை ஜன்சப்தி சிறப்பு ரெயில், திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரெயில் ஆகியை இயக்கப்பட்டன. ஆனால் அதன்பின் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் அந்த ரெியல் போக்குவரத்தும் வருகிற 15-ந் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பஸ் போக்குவரத்து வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

நீட்டிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோவை- காட்பாடி சிறப்பு ரயில்களும், அரக்கோணம் – கோவை இண்டர்சிட்டி ரெயில்கள், கோவை மயிலாபுதுறை ஜன்சப்தி சிறப்பு ரெயில், திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.