June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கணவனுக்கு காதலியிடம் இருந்து வந்த போன் அழைப்பு -விரக்தியில் மனைவி தற்கொலை

1 min read

16.7.2020

Phone call from husband to girlfriend – Wife commits suicide

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது எருமனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் 85 ஆயிரம் சம்பளத்துக்கு பணிபுரிந்த விஜயகுமாருக்கு  திருமணத்தின்போது 50 சவரன் நகைகளும், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனமும் வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் வரதட்சணையாக பெண் வீட்டார் அளித்துள்ளனர். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ஷோபனாவை அவரது மாமியார் வரதட்சணை கேட்டு ஆபாச வார்த்தைகளால் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே விஜயகுமார் ஐ.டி வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இதனிடையே தூங்கிக் கொண்டிருந்த விஜயகுமாரின் செல்போனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழைத்து பேசியுள்ளார். அதை ஷோபனா அட்டென் செய்ய, அப்பெண்ணோ தான் விஜயகுமாரின் காதலி என்று கூறி 41 நிமிட உரையாடலில் விஜயகுமாரின் காதல் லீலைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

தூங்கி எழுந்த விஜயகுமார், நடந்ததை அறிந்ததும், மனைவியிடம் சிக்கியதை மறைத்துக்கொண்டு, வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து உதைத்துள்ளார். இந்த கடும் செயலால் வேதனை அடைந்த ஷோபனா, வேதனையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.