தமிழகத்தில் ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா; 79 பேர் சாவு
1 min read
4,538 person affected for corona and death 79 in Tamil nadu t0day
17-7-2020
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
4,538 பேருக்கு கொரோனா
தமிழகத்தில்பரவி வரும் கொரோனா பற்றிய தகவலை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. . இவர்களில் 4,463 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 75பேர் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 109 ஆய்வகங்களில் பரிசோனை செய்யப்பட்டன. (இதில் அரசு ஆய்வகங்கள்-55 . தனியார் ஆய்வகங்கள்/ 54) . இவைகள் மூலமாக இன்று மட்டும் 48,669 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 18 லட்சத்து 31 ஆயிரத்து 304 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
79 பேர் சாவு
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 2,755 பேர் ஆண்கள், 1,783 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 98,063 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 62,821 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 79 பேர் இறந்துள்ளனர். இதில், 23 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 56 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,315 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 47,782 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் 36 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவை, திருவள்ளூரில் தலா 5 பேரும், மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், திருச்சி, வேலூரில் தலா 3 பேரும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 79 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில்…
தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,243 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது.. சென்னையை தவிர்த்து, இன்று மதுரையில் 263 பேருக்கும், திருவள்ளூரில் 220 பேருக்கும், விருதுநகரில் 196 பேருக்கும், தூத்துக்குடியில் 189 பேருக்கும், வேலூரில் 183 பேருக்கும், தேனியில் 175 பேருக்கும், திண்டுக்கலில் 163 பேருக்கும், கன்னியாகுமரியில் 151 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
திருநெல்வேலியில் 119 பேருக்கும் தென்காசியில் 65 பேருக்கும் கொரோனா இன்று கண்டறிப்பட்டு உள்ளது.