கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம்
1 min read
17.7.2020
Saffron paint for Periyar statue in Coimbatoreகோவை பொள்ளாச்சி ரோட்டில் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை உள்ளது. இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிலையை பார்வையிட்டனர். அப்போது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலை மீது காவி சாயம் பூசி சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காவி சாயம் பூசி சென்ற மர்ம நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலையில் சாயம் பூசியதாக ஒரவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.