சிவகளை அகழ்வாராய்ச்சியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பானை ஓடுகள்
1 min read
Pottery dating back 2,500 years in Shivakalai excavations
17-7-2020
சிவகளையில் நடக்கும் அகழ்வாராய்சியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால குறியீடுகளுடன் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
சிவகளை
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் கடந்த மே மாதம் 22-ந் தேதி முதல் மாநில தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டு வருகின்றனர். சிவகளையில் தமிழக தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் பிரபாகர், தங்கதுரை ஆகியோரும், ஆதிச்சநல்லுாரில் பாஸ்கர், லோகநாதன் ஆகியோரும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகளை என்பது திருநெல்வேலியில் இருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.
சிவகளையில் நேற்றைய ஆய்வில் தமிழ் கிராவிட்டி எழுத்துகள் பொறித்த ஐந்து பானை ஓடுகள் கிடைத்தன. இந்த பானை ஓடுகள் மேலோட்டமாக கிடைத்துள்ளன.
2,500 ஆண்டுகளுக்கு முன்…
இதுகுறித்து துணை இயக்குநர் சிவானந்தம் கூறியதாவது:-
சிவகளையில் கண்டடெக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ளவற்றை கீறல்கள் அல்லது குறியீடுகள் எனலாம். இது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்த, எழுத்து உருவாக்கத்திற்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாகும்.
இவ்வாறு சிவானந்தம்கூறுினார்.
அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடப்பதால் ஆழத்தில் இன்னமும் முழுமையான குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆர்வலர் ஆசிரியர் சிவகளை மாணிக்கம் தெரிவித்தார்.
முதுமக்கள் தாழி
சிவகளையில் இதற்குமுன்பு அதாவது கடந்த ஜுன் மாதம் 15-ந் தேதி அன்று நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கச்சிதமாக செய்யப்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் சில தாழிகளில் கட்டை விரல் ரேகை உள்ளிட்ட குழு முத்திரைகள் இடம்பெற்றிருந்தன.