பெரியார் சிலையில் காவிசாயம்; கமல்ஹாசன் கண்டனம்
1 min read
Saffron on Periyar statue; Kamal Haasan condemned
18-7-2020
கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டனம்
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை சிலர் காவி சாயம் ஊற்றி அவமதித்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரித்தாளும் சூழ்ச்சி
தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.