June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பரவலை தடுக்க திருப்பதியில் ஆகஸ்டு 5-ந் தேதி வரை முழு ஊரடங்கு

1 min read
Full curfew in Tirupati till August 5th

21-7-2020

திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பல முறை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டன. அதில் கோவில் உள்பட வழிபாட்டுத் தலங்களை திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருப்பதி கோவிலில் முதன் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கவுன்டர்களில் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஆன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு

இந்த நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று( செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்த 15 நாட்களிலும் பொதுமக்கள் பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.