எதிரிகளின் டாங்கியை ஹெலிகாப்படலி சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
1 min read
Helicopter missile test victory over an enemy tank
22-7-2020
எதிரிகளின் டாங்கியை ஹெலிகாப்டரில் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஏவுகணை
எதிரிகளின் இலக்கை நோக்கி தாக்குவதற்காக ராணுவத்தில் ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து இந்த ஏவுகணைகளை இயக்குவார்கள். தற்போது ஹெலிகாப்டரில் சென்று டாங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை உருவாக்கப்பட்டது.
இதற்கு துருவஸ்ட்ரா ஏவுகணை என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த துருவஸ்ட்ரா என்ற ஹெலிகாப்டரில் இருந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஒடிசா பாலசோரில் சோதனை செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஏவுகணை ஹெலிகாப்டரில் சுமந்து சென்று சோதனை நடத்தபடவில்லை. தரையில் இருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை கடந்த 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.