தமிழகத்தில் ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா ; தூத்துக்குடியில் 300 ஐ தாண்டியது
1 min read
In Tamil Nadu 5.849 person affected for corona
22-7-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 300 ஐ தாண்டியது.
5,849 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவில் பற்றிய தகவலை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) மட்டும் 5,849 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 5,775 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 74 பேர். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்களில் இன்று மட்டும் 60,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ஆய்வகங்கள்-58. தனியார் ஆய்வகங்கள்- 55.
இதுவரை மொத்தம் 20 லட்சத்து 95 ஆயிரத்து 757 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,481 பேர் ஆண்கள், 2,368 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,13,319 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 73,150 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 4,910 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக உள்ளது.
74 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 74 பேர் இறந்தனர். இவர்களில், 24 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 50 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 51,344 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் 21 பேரும், கடலூரில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், விருதுநகரில் 6 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், திருவண்ணாமலை, வேலூரில் தலா 4 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனியில் தலா 2 பேரும், கரூர், ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் என 74 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
மொத்த உயிரிழப்புகளுடன் 444 இறப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 1-ந் தேதி முதல் ஜூன் 10-ந் தேதி வரை மத்திய அரசின் வழிகாட்டுதலின்படடி 444 மரணங்கள் விடுபட்டதாகவும் அவை இப்போது கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தூத்துக்குடி
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) சென்னையில் மட்டும் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 430 பேருக்கும், ராணிப்பேட்டையில் 414 பேருக்கும், விருதுநகரில் 363 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 325 பேருக்கும், தூத்துக்குடி 323 பேருக்கும், செங்கல்பட்டில் 223 பேருக்கும், திருச்சியில் 213 பேருக்கும், திருவண்ணாமலையில் 210 பேருக்கும், மதுரையில் 197 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
திருநெல்வேலியில் 120 பேருக்கும், தென்காசியில் 85 பேருககும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.