June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பயங்காரவாதிகளை சுட்டுக்கொன்ற 15 வயது சிறுமி; பெற்றோரைக் கொன்றதால் ஆத்திரம்

1 min read
15-year-old girl shot dead by terrorists; Anger at killing parents

23-7-2020

ஆப்கானிஸ்தானில் தன்னுடைய பெற்றோரை கொன்ற பயங்கரவாதிகளை 15 வயது சிறுமி சுட்டுக்கொன்றாள்.

பங்கரவாதம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறத. தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஒரு சில பகுதிகளில் தங்கள் கைவசம் வைத்து உள்ளனர். அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்து வரும் இந்த போரில் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். தாலிபான் வசம் உள்ள பகுதியில் யாரேனும் அரசுக்கு ஆதரவாக இருந்தால் அவர்களை சுட்டுக் கொல்லவும் தயங்க மாட்டார்கள். அதாவது அரசின் ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் வழங்குகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையின் பொதுமக்களையும் அவர்கள் கொன்று வருகின்றனர்.

15 வயது சிறுமி

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி கணவன்-மனைவியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது அந்த தம்பதியரின் 15 வயது மகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் தனது பெற்றோரின் சாவுக்கு காரணமான பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ணடார்.

அந்த வீர சிறுமியின் பெயர் கோமர் குல். ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணம் தைவாரா மாவட்டம் கிர்வா கிராமத்தை சேர்ந்தவர். இந்த சிறுமி வீட்டில் அவரது தாய்-தந்தை உள்பட 4 பேர் வசித்த ந்தனர்.
சிறுமியின் தந்தை அந்தக் கிராம தலைவராக இருந்து வந்தார். அவர் ஆப்கான் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக தலிபான் பயங்கரவாதிகள் கருதினார்கள். கடந்த வாரம் இரவு பங்கர வாதிகள் அவர்களது வீட்டிற்குச் சென்றனர். கோமரின் தந்தை மற்றும் தாயை வீட்டில் இருந்து வெளியே தரத்தரவென இழுத்து வந்த தலிபான்கள் இவருவரையும் கடுமையாக தாக்கினர். தடுக்க முயற்சித்த கோமரையும் தாக்கினர். இறுதியாக தந்தை மற்றும் தாயை
வீட்டின் வாசலில் வைத்து கோமர் மற்றும் அவரது சகோதரரின் கண்முன்னே சுட்டுக்கொன்றுனர்.

ஆவேசம்

தந்தை மற்றும் தாய் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டு ஆவேசம் அடைந்த கோமர் வீட்டிற்குள் சென்றார். அங்கு தனது தந்தை பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஏகே 47 நவீன ரக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார்.
வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த தலிபான்களை சரமாரியாக சுட்டார். இதில் 2 தலிபான்களின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

கோமரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய அவரின் தம்பியும்
பெற்றோர் உயிரிழப்புக்கு காரணமான தலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினான்.

சிறுவன் சுட்டதில் சில தலிபான்கள் காயமடைந்தனர். இதனால் மற்ற தலிபான்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

பாராட்டு

பொற்றோரை கொன்ற தலிபான்களை 15 வயது சிறுமி கோமர் குல் மற்றும் அவரது சகோதரர் இருவரையும் அந்நாட்டு அதிபர் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தலிபான் பயங்கரவாதிகளை எதிர்த்து மேலும் சண்டையிட தான் தயாராக இருப்பதாக சிறுமி கோமர் குல் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.