கொரோனாவுக்கான 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை-ரஷ்யா அறிவிப்பு
1 min read
4 vaccines for coronavirus are safe-Russia announcement
23-7-2020
ரஷியாவில் தயாரிக்கப்பட்டு உள்ள 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என தெரியந்துள்ளதாக அந்தநாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
உலகம் முழுவதும் கொடூரமாக பரவி வரும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அதேநேரம் தடுப்பூசிகள் கண்டு படிக்கும் முயற்சியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் இறங்கி உள்ளன. பல நாடுகள் தடுப்பூசி கண்டு பிடித்துவிட்டு அதை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்து வருகிறது.
ரஷியாவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. தப்போது அந்த நாடு தயாரித்த 4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என அந்த நாடு அறிவித்து உள்ளது.
இது குறித்து ரஷிய பிரதமர் மிக்கைல் மிசுஸ்டின் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று கூறினார். அவவர் பேசும்போது கூறியதாவது:-
பாதுகாப்பானவை
நாட்டில் மொத்தம் 17 அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக 26 வகையிலான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித நல்வாழ்வு கண்காணிப்பதற்கான கூட்டாட்சி சேவையின் தகவலின் அடிப்படையில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது. மேலும், இரண்டு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. இவை ஹமேல்யா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு துறையின் கூட்டு ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேலும், இரண்டு தடுப்பூசிகள் தொடக்க நிலை பரிசோதனையில் உள்ளன. இவை வைராலஜி, பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம்
மற்றும் தடுப்பூசிகள் மற்றும் சீரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.