தமிழகத்தில் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா; 88 பேர் சாவு
1 min read
In Tamil Nadu 6.472 person affected for corona and death 88 today
23-7-2020
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்க கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இன்று மட்டும் 88 பேர் இறந்துள்ளனர்.
6,472 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் தகவலை தினமும் மாலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழ்நாட்டில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 6,472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 6,423 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 49 பேர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1,17,252 பேர் ஆண்கள், 75,689 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,699 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1.59,384 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23 ஆயிரத்து 881 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு 52,939 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 5,210 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583ல் இருந்து 1,36,793 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் 62,112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 21,57,869 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
88 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் ( வியாழக்கிழமை) 88 பேர் இறந்துள்ளனர். இவர்களில் அரசு ஆஸ்பத்திரிகளில் 63 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 25 பேரும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.
சென்னையில் மட்டும் இன்று 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 89,542லிருந்து 90,900 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 20வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.