இந்தியாவில் ஒரே நாளில் 45,720 பேருக்கு கொரோனா 1,129 பேர் சாவு
1 min read
Over all India 45, 720 person affected for corona and death 1.129 one day
23-7-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 45,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,129 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
45,720 பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(புதன் கிழமை)) ஒரே நாளில், 45,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 12,38,635 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1,129 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கூடுதலா 444 பேர் இறந்த எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டு உள்ளதால் இறந்தவர்களின் எ்ண்ணிக்கை மிக அதிகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 28,732 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 7,82, 606 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,26,167 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 3,50,823 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1.5 கோடி மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
மராட்டியம்
கொரோனா பாதிப்பில் தொடர்ந்து மராட்டிய மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணணிக்கை 3,37,607 ஆக உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் 1,86,259 கொரோனா பாதிப்பாக உள்ளது.
டெல்லி 1,26,334 பேரும், கர்நாடகதில் 75,833 பேரும், குஜராத்தில் 51,399 பேரும், உத்தரபிரதேசத்தில் 55,588 பேரும், தெலுங்கானா 49,259 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.