ஆகஸ்டு 15-ந் தேதி வெளியிடப்படும் கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் பரிசோதனை
1 min read
The corona vaccine, which will be released on August 15, will be tested in Tamil Nadu
23-7-2020
இந்தியாவில் ஆகஸ்டு 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது. சென்னை:
கொரோனா தடுப்பூசி
கொரோனாவுக்கான தடுப்பூசிகளை பல்வேறு நாடுககள் கண்டுபிடித்து உள்ளன. அவற்றை பரிசோதித்துப் பார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் ( ஆகஸ்டு ) 15-ந் தேதி (சுதந்திர தினத்தன்று ) அது பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில்….
இதையடுத்து அந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
டெல்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ‘கோவாக்சின்’ பரிசோதனை தொடங்கிவிட்டது.
தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை இன்று(வியாழக்கிழமை) தொடங்கியது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து பரிசோதனை தொடங்கியது.
இந்த பரிசோதனைக்கு ஆரோக்கியமான நிலையில் உள்ள 10 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். அவர்களில் 2 பேருக்கு 0.5 மில்லி என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.