ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந் தேதி தொடங்குகிறது
1 min read
IPL cricket match starts on September 19
24-7-2020
ஐ.பி.எல். கிரிக்கெட்ட போட்டி செப்டம்பர் மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த போட்டிகிளில் ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) கிரிக்கெட்டும் ஒன்று. இந்தப் போட்டி ஆண்டு தோறும் மார்ச் மாதம் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. மேலும் எப்போது நடைபெறும் என்று அறிவிக்காத வகையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் மாதம்
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. அதேபோல் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்தவும் இலங்கை அரசு விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை
துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் செப்டம்பர் 19 -ந் தேதி தொடங்கி நவம்பர் 8 -ந் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இறுதி விவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கும், அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் ஐ.பி.எல். ஆட்சிக்குழு அடுத்த வாரம் கூடுகிறது.
செப்டம்பர் 26 முதல் ஐ.பி.எல் தொடங்கும் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பி.சி.சி.ஐ அதை ஒரு வாரத்திற்குள் முன்னர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.