தமிழகத்தில் ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா- 85 பேர் சாவு
1 min read
In Tamil Nadu 6/986 person affected for corona and death 85 Today
26-7-2020
தமிழ்நாட்டின் இன்று ஒரேநாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
6,986 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிட்டு தகவல்கள் வருமாறு:-
தமிழ்நாட்டின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக உயர்ந்துள்ளது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று மட்டும் 5,471 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,51,055 லிருந்து 1,56,526 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சென்னை
சென்னையில் மேலும் 1,155 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 23வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5,830 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,011 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக…
இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக வருமாறு:-
அரியலூர் 27
செங்கல்பட்டு 501
சென்னை 1155
கோயம்புத்தூர் 220
கடலூர் 165
தருமபுரி 131
திண்டுக்கல் 203
ஈரோடு 34
கள்ளக்குறிச்சி 125
காஞ்சிபுரம் 363
கன்னியாகுமரி 215
கரூர் 12
கிருஷ்ணகிரி 51
மதுரை 209
நாகப்பட்டினம் 36
நாமக்கல் 9
நீலகிரி 31
பெரம்பலூர் 26
புதுக்கோட்டை 113
ராமநாதபுரம் 89
ராணிப்பேட்டை 367
சேலம் 162
சிவகங்கை 88
தென்காசி 73
தஞ்சாவூர் 153
தேனி 217
திருப்பத்தூர் 44
திருவள்ளூர் 480
திருவண்ணாமலை 176
திருவாரூர் 93
தூத்துக்குடி 248
திருநெல்வேலி 186
திருப்பூர் 32
திருச்சி 131
வேலூர் 196
விழுப்புரம் 208
விருதுநகர் 385
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 7
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 24
ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1
மொத்தம் 6,986