கடையம் விவசாயி உடல் மறு பிரதே பரிசோதனை
1 min read
Kadayam Farmer Body Re-examination
1-8-2020
கடையம் விவசாயி அணைக்கரை முத்து இறந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, அவரது உடலானது மறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடையம் விவசாயி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைகுளத்தில் வனத்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் அணைக்கரை முத்துவின் உடல் 9 நாட்களுக்கு பிறகு ஐகோர்ட்டு உத்தரவின்படி, நெல்லை அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 22-ந் தேதி அணைக்கரை முத்து உயிரிழந்தார். தற்போது நெல்லை தடயவியல் தலைமை செல்வமுருகன், தடயவியல் துறை ஆசிரியர் பிரசன்னா, தூத்துக்குடி மருத்துவத்துறை தடயவியல் தலைவர் சுடலமுத்து ஆகியோர்பிரேத பரிசோதனை ஆய்வுகளை மேற்கொண்டனர். அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஏற்கனவே இந்த வழக்கினை விசாரித்து வருகிறார்.
எனவே அவரும் மறு பிரேத பரிசோதனை நடைபெறும் நெல்லை மருத்துவமனைக்கு வந்திருந்தார். மேலும், இறந்த அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள், மகள் வசந்தி, மற்றும் பல உறவினர்களும் வந்திருந்தனனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களும் பிரேத பரிசோதனை நடைபெற்ற மருத்துவமனையின் வளாகத்தில் அமர்ந்துள்ளனர். மறு பிரேதபரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளைபதிவாளர்களிடம் சமர்பிக்கப்படும்.