நடைபாதையில் வசிக்கும் மாணவி போட்டித் தேர்வில் சாதனை
1 min read
Student living on the sidewalk competitive achievement
1-8-2020
மும்பையில் நடைபாதையில் வசிக்கும் மாணவி போட்டித் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
நடைபாதையில் வசிக்கும் மாணவி
மும்பை நகரத்தின் மக்கள் நடமாட்டம் மிகுந்த நடைபாதையில் வசிக்கும் மாணவி ஆஷ்மா ஷேக், மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய போட்டித் தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார்.
மும்பை டோங்க்ரி பகுதியில் உள்ள லால்ஜிபாய் சாஜன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்த மாணவி ஆஷ்மாவின் தந்தை எலுமிச்சை ஜூஸ் விற்பனை செய்பவர். ஆஷ்மா மற்றும் அவளது சகோதரனையும் நன்றாக படிக்கவைக்க அவர் கடுமையாக உழைத்துவருகிறார்.
மும்பை துறைமுகம் அருகேயுள்ள ஆஸாத் மைதானத்தில் உள்ள நடைபாதையில்தான் ஆஷ்மாவின் குடும்பம் வசித்துவருகிறது. அங்கே உள்ள தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து, வார்த்தைகளில் விவரிக்கமுடியாத சிரமங்களைக் கடந்து எஸ்எஸ்சி போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், பதினேழு வயதான ஆஷ்மா.
பத்திரிகையாளராக ஆசை
“தினமும் போக்குவரத்து சத்தத்தால் பகலில் என்னால் படிக்கமுடியாது. இரவில்தான் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிப்பேன். எங்களுக்கு டியூசன் கட்டணம் கட்ட அப்பா ரொம்பவும் சிரமப்படுவார். இன்னும் டியூசன் ஆசிரியருக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டியுள்ளது. அப்பாவுக்கும் ஊரடங்கு நாட்களில் வருமானமும் குறைந்துவிட்டது” என்று உருக்கமாகப் பேசுகிறார் ஆஷ்மா.
ஆஷ்மாவுக்கு தொடர்ந்து படிக்கவேண்டும் என்று ஆசை. எதிர்காலத்தில் பத்திரிகையாளராக மாறவேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருக்கிறது.
