அமெரிக்காவிலும் டிக்-டாக் கிற்கு தடை வருகிறது
1 min read
Tick-tock is also banned in the United States
1-8-2020
அமெரிக்காவிலும் டிக்-டாக் கிற்கு தடை கொண்டுவர அதிபர் டிரம்ப் திட்டமிட்டு உள்ளார்.
டிக்-டாக்
இந்திய எல்லைக்குள் சீனா புகுந்ததால் எல்லைப் பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் கடந்த ஜூன் மாதம் 15–ந் தேதி இந்திய – சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். சீன தரப்பில் 30 பேர் வரை இறந்ததாக கூறப்படுகிறது.
சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா உள்பட பல நாடுகள் கண்டித்தன. இந்திய மக்களும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தனர்.
இதனால் தேச நலனுக்கு எதிராகவும் தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
அமெரிக்கா
சீனாவின் செயலியான டிக்-டாக் செயலியை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனா வைரசை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்-டாக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.